திங்கள், 29 நவம்பர், 2010

இவர்கள் ஏன் நமக்கு ஆசான்கள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆஸ்தான குருக்களாக பாரதி,பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகயோர் விளங்குகிறார்கள்.மாகவி
பாரதி ஆங்கில ஏகாதிபத்திய ஆதிக்க காலத்தில் தனது பேனா ஆயுதம் மூலம் வீறுகொண்ட
கவிதைகளை படைத்து மக்கள் மத்தியில் வீராவேசத்தை விதைத்தவன்.சமூக சீர்திருத்த விதைகளையும் விதைத்தவன். உலகளாவிய ஞானம் கொண்டு சோசலிசத்தை சோவியத்தை
அதன் புரட்சியை பாராட்டி மகிழ்ந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக