புதன், 10 நவம்பர், 2010

பரவட்டும் படைப்புகள் நிகழ்ச்சிகள்

வளரந்துவரும் அறிவியல் யுகத்தில் படைப்புகளை அச்சு ,பேச்சு, தொலைக்காட்சி
ஆகியவற்றின்மூலம்தான் வெளியிட வேண்டியிதில்லை. பரவலாக நம் உறுப்பினர்கள்
உள்ளத்திலிருந்து ஓடிவரும் அருவிச்சிந்தனைகளை,வாசக நண்பர்களிடமிருந்து வரும்
கருத்துகளை பதிவுசெய்து திரட்டிவைத்து இன்னும் பலருக்கு பகிர்ந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான விவாதம் மூலமாக த மு எ க ச செயல்பாட்டை கூர்மைப் படுத்தலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
வலைப்பதிவின் மூலம் த மு எ க ச குடும்பத்திற்குள்ளும் த மு எ க ச சொந்த பந்தங்கள் மத்தியில்
இருந்தும் படைப்புகள் நிகழ்ச்சிகளின் விபரங்கள் இந்தக் களத்தில் நிரம்பட்டும். கைவிரல்
பேனாக்களை எடுங்கள் இந்த வையம் முழுதும் சிந்தனை மூலம் சிறக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக